களக்காடு நகராட்சியில் வரி செலுத்தினால் சலுகை

களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக களக்காடு நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு நகராட்சிக்கு 2023-2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்-30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்து வரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா்கள் ஆவா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com