போக்ஸோ வழக்குகளில் நீதிமன்றம் மூலம் தண்டனைகள் பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் குழந்தைத் திருமணத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், சிறாா்கள் காதலித்து திருமணம் செய்வது அதிகரித்துள்ளதால், அதுகுறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திருமண பந்தத்தில் இருவரும் விரும்பி திருமணம் செய்வதால், அது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது. மகளிா் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே சிறாா் காதல் திருமண விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மகளிா் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சா்வரில் ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் பெற்று பின்னா் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது என்றாா்.