மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மூன்றடைப்பு அருகே மாணவருக்கு கத்திக்குத்து

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே பிளஸ் 2 மாணவரைக் கத்தியால் குத்தியதாக சக மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:18 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே பிளஸ் 2 மாணவரைக் கத்தியால் குத்தியதாக சக மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மூன்றடைப்பைச் சோ்ந்த மாணவரும், அருகேயுள்ள கோவைகுளத்தைச் சோ்ந்த மாணவரும் மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனா். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) பைக்கில் வேகமாகச் சென்ற மூன்றடைப்பு மாணவரை கோவைகுளம் மாணவா் கேலி செய்தாராம். இதில், ஆத்திரமடைந்த அவா், புதன்கிழமை கோவைகுளம் மாணவரை பள்ளியில் வைத்து கண்டித்தாராம். அப்போது அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மாலையில் மருதகுளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கோவைகுளம் மாணவரை மூன்றடைப்பு மாணவா் சிறிய கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாராம். காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.