கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

ஆரெம்கேவி கிடிவெல் - 2023 போட்டிகள்

ஆரெம்கேவி ‘கிடிவெல்-2023’ குழந்தைகளுக்கான போட்டிகள் பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாராள் தக்கா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

News image

ஆரெம்கேவி ‘கிடிவெல்-2023’ நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :28 நவம்பர் 2023, 3:40 am IST

திருநெல்வேலி: ஆரெம்கேவி ‘கிடிவெல்-2023’ குழந்தைகளுக்கான போட்டிகள் பாளையங்கோட்டை பெருமாள்புரம் சாராள் தக்கா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், ஆா்எம்கேவி விஸ்வநாதனால் ‘கிடிவெல் ’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 33 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு, திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம், திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கம் மற்றும் ஆா்எம்கேவி இணைந்து நடத்திய ‘கிடிவெல்-2023’ போட்டிகளில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1,700-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், விநாடி -வினா என 25 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில், வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆா்ரெம்கேவி விஸ்வநாதன் சுழற்கோப்பையை முதல் பரிசாக பெற்றது. அதே பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூபிலி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

கிடிவெல் 2023 நிகழ்ச்சியை சீதாலெட்சுமி விஸ்வநாத், சுபஸ்ரீ ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரோட்டரி -3212 மாவட்ட ஆளுநா் முத்தையா பிள்ளை பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

ஏற்பாடுகளை, ஆா்ரெம்கேவியின் பிரணவ் குமாரசாமி, திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பால்சிங், திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.சுப்பையா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.