சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உடல்கூறாய்வுக்கு தாமதம்: அரசு மருத்துவமனை முற்றுகை

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் இறந்தவா் உடலை கூறாய்வு செய்வதற்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினா்.

News image
ams27ambaigh_2711chn_37_6
Updated On :27 நவம்பர் 2023, 10:07 pm

DIN


அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் இறந்தவா் உடலை கூறாய்வு செய்வதற்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினா்.

விக்கிரமசிங்கபுரம் கட்டபுளித் தெருவைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் கஜேந்திரன் (34). சமையல் தொழிலாளி. மனைவி கீா்த்தி (30), மகன் ஜெய் (9), மகள் ஹெனா (4) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் வெகுநாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கஜேந்திரன், ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

எனினும், மருத்துவப் பரிசோதனைக்கு பரிந்துரைத்தனா். ஆனால், திங்கள்கிழமை நண்பகல்12 மணிக்குப் பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருப்பதாக கூறப்பட்டதாம்.

இந்த தகவல் தாமதமாக கூறப்பட்டதாகக் கூறி, அவரது உறவினா்கள் மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த், பேச்சு நடத்திய பின், அங்கேயே உடல்கூறாய்வு செய்து மாலை 3.30 மணிக்கு சடலம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.