எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

கன மழை: களக்காடு தலையணை, நம்பிகோயில், மாஞ்சோலை சுற்றுலா செல்லத் தடை

Updated On :15 ஆகஸ்ட் 2024, 6:39 am IST

அம்பாசமுத்திரம்/ களக்காடு, ஆக. 14:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு சூழல் சுற்றுலா செல்ல மறுஅறிவிப்பு வரும் வரை தடைவிதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரையில் மாஞ்சோலை பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

திருமலைநம்பி கோயில் செல்லத் தடை...

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தல் காரணமாக திருக்குறுங்குடி சூழல் சுற்றுலாத் தலம், திருமலைநம்பி கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ஆக.14 முதல் 18 வரை தடை விதிக்கப்படுவதாகவும், இதே போல தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.