மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கன மழை: களக்காடு தலையணை, நம்பிகோயில், மாஞ்சோலை சுற்றுலா செல்லத் தடை

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 1:09 am

Din

அம்பாசமுத்திரம்/ களக்காடு, ஆக. 14:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு சூழல் சுற்றுலா செல்ல மறுஅறிவிப்பு வரும் வரை தடைவிதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரையில் மாஞ்சோலை பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

திருமலைநம்பி கோயில் செல்லத் தடை...

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தல் காரணமாக திருக்குறுங்குடி சூழல் சுற்றுலாத் தலம், திருமலைநம்பி கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ஆக.14 முதல் 18 வரை தடை விதிக்கப்படுவதாகவும், இதே போல தலையணை பச்சையாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.