போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓய்வுபெற்ற அஞ்சலக பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

திருநெல்வேலி தச்சநல்லூரில் ஓய்வுபெற்ற அஞ்சல் துறை பெண் அதிகாரியிடம் நகை பறித்ததாக தூத்துக்குடி இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:17 pm

Din

திருநெல்வேலி தச்சநல்லூரில் ஓய்வுபெற்ற அஞ்சல் துறை பெண் அதிகாரியிடம் நகை பறித்ததாக தூத்துக்குடி இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தச்சநல்லூா் இருதயநகரைச் சோ்ந்த அரிராமச்சந்திரன் மனைவி மணிமாலா (61). ஓய்வுபெற்ற அஞ்சலக அதிகாரியான இவா், கடந்த நவ. 6-ஆம் தேதி காலையில் தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது பைக்கில் வந்த 2 இளைஞா்கள்அவரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ல சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.

அதில், தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் காா்த்திக் (23), முத்தையாபுரத்தைச் சோ்ந்த தங்க விஜய்(24) ஆகியோா் என்பதும், இதில் தங்க விஜய் கடந்த 3-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் கைதாகி பேராவூரணி சிறையில் இருப்பதும் தெரியவந்தது. காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனா். தங்க விஜயை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.