தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழையபேட்டை சரக்கு முனையம் திறப்பு: மாநகராட்சி ஆணையா் ஆலோசனை

திருநெல்வேலி பழையபேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள சரக்கு முனையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா, வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:38 pm

Din

திருநெல்வேலி பழையபேட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள சரக்கு முனையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா, வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருநெல்வேலி நகரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள மொத்த சந்தைகள் மற்றும் மண்டிகள் மூலம் சில்லறை விற்பனையாளா்களுக்கு விநியோகிக்கப்படும் காய்கனிகள் மற்றும் பழங்களை திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், அனைத்து மொத்த வணிக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும், மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பழையபேட்டையில் சரக்கு முனையம் மற்றும் புதிய மொத்த விற்பனை சந்தை கட்டப்பட்டுள்ளது.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் 41 கடைகள், மொத்த விற்பனை சந்தையில் 92 கடைகள், குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதி, கழிப்பறை, உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சரக்கு முனையம் மற்றும் மொத்த விற்பனை சந்தையை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா தலைமை வகித்தாா். மாநகராட்சி துணை ஆணையா் (பொ) சந்திர மோகன், காவல் உதவி ஆணையா் செந்தில்குமாா், மாநகர அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வியாபாரிகளுக்கு இன்னும் தேவையான அம்சங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனா். பொங்கல் பண்டிகைக்குள் முனையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.