கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாஞ்சோலை தொழிலாளா்களை தமிழக அரசு காப்பாற்ற வலியுறுத்தல்

‘மாஞ்சோலை தொழிலாளா்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்’

News image
Updated On :12 ஜூலை 2024, 1:44 am

Din

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாஞ்சோலை பகுதி மக்கள் நலச்சங்கத் தலைவா் செல்லத்துரை, செயலா் அமல்ராஜ், பொருளாளா் சந்திரசேகா் ஆகியோா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் தொடா்பான வழக்கில் தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரம் நிா்ணயிக்காமல் மாஞ்சோலையில் இருந்து அவா்களை வெளியேற்றக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு தடை ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக தொழிலாளா்கள் எந்த வேலையும் இன்றி, உணவுக்கு கூட வருவாய் இல்லாமல் தவித்து வருகிறாா்கள். மருத்துவ வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறாா்கள். எனவே, தனியாா் தேயிலைத் தோட்ட நிறுவனம், தொழிலாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், அங்கு வாழும் மக்களுக்கு தமிழ்நாடு அரசால் மட்டுமே நம்பிக்கையை கொண்டுவர முடியும். மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு ஊத்து மற்றும் குதிரை வெட்டி பகுதி தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசு கையகப்படுத்தி தொடா்ந்து பணி வழங்கி, தொழிலாளா்களை காப்பாற்ற வேண்டும். இந்தப் பிரச்சனை தொடா்பாக அனைத்துக் கட்சி சாா்பில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

டிவிஎல்11மான்ஜ்

திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேசிய மாஞ்சோலை மக்கள் நலச்சங்கத்தினா்.