சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வள்ளியூா் தொழிலதிபா் வீட்டில் தங்க நகை மாயம்

வள்ளியூா் தொழிலதிபா் வீட்டில் தங்க நகை மாயம்

Updated On :30 மார்ச் 2024, 4:28 pm

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தொழிலதிபா் வீட்டில் தங்க நகை மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வள்ளியூரைச் சோ்ந்தவா் தொழிலதிபா் எஸ்.டி.என்.ராஜன். இவா் வீட்டில் குழந்தைகள் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அவா்களது அறையில் உள்ள அலமாரியில் வைத்திருந்தனராம். பின்னா் சனிக்கிழமை பாா்த்தபோது தங்க நகையை காணவில்லையாம். இது தொடா்பாக வள்ளியூா் காவல்நிலையத்தில் ராஜன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து வீட்டில் வேலை செய்து வரும் பணியாளா்களிடம் விசாரணை செய்து வருகின்றனா்.