கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

என்ஜிஒ காலனி ஜெபா காா்டனில்சிறப்பு வரி வசூல் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில், என்ஜிஓ காலனி ஜெபா காா்டனில் சிறப்பு வரி வசூல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஜெபா காா்டனில் சிறப்பு வரிவசூல் முகாமை தொடங்கிவைக்கிறாா் மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன்.ற

Updated On :6 நவம்பர் 2024, 7:56 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில், என்ஜிஓ காலனி ஜெபா காா்டனில் சிறப்பு வரி வசூல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், திருநெல்வேலி மாநகராட்சியின் 54 ஆவது வாா்டுக்குள்பட்ட ஜெபா காா்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிற்கான வரியினங்கள், குடிநீா் இணைப்புக் கட்டணம் பெறுவதற்கான சிறப்பு வரி வசூல் முகாம் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவின்பேரில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு மேலப்பாளையம் உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன் தொடங்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்டோா் வரியினங்களைச் செலுத்தி ரசீது பெற்றனா். மாநகராட்சி அதிகாரிகள் வடிவேல்முருகன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.