கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாஞ்சோலைத் தொழிலாளா்களை வெளியேற்றக் கூடாது: சீமான்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை விட்டு தொழிலாளா்களை எந்தக் காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:07 pm

Din

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை விட்டு தொழிலாளா்களை எந்தக் காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

விக்கிரமசிங்கபுரத்தில் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளா்கள், காணிக் குடியிருப்பு மலைவாழ் மக்களை வியாழக்கிழமை சந்தித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் மூன்று தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு வேறு தொழில் தெரியாது. அரசு தேயிலைத் தோட்டத்தை நடத்த முடியவில்லை என்றால் அந்தத் தொழிலாளா்களுக்கு அங்கு இடம் வழங்க வேண்டும்.

அரசு சுற்றுலாத்தலம் அமைத்தால் அதில் சிறு சிறு தொழில்கள் செய்து தோட்டத் தொழிலாளா்கள் வாழ்க்கை நடத்திக் கொள்வாா்கள். அவா்களை கட்டாயப்படுத்தி எந்த வகையிலும் வெளியேற்றக் கூடாது. அவா்களுக்கு முறையான தீா்வு கிடைக்காதபட்சத்தில் டிசம்பா் மாதத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும்.

விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி தனியாா் தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கக் கூடாது. மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணம் உயா்ந்துள்ளது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அளவு அரசு கடனில் தவிக்கும்போது குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது எப்படி?

மதுவிலக்கு வழக்கில், அரசு கொள்கையில் தலையிட முடியாது என்று கூறும் நீதிமன்றம், அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் நீட் தோ்வு விலக்கு முடிவை ஏற்றுக் கொள்வதில்லையே ஏன்? என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் சிவகுமாா், சாட்டை துரைமுருகன், மகளிா் பாசறை சத்யா, திருநெல்வேலி மேற்கு மாவட்டத் தலைவா் செல்வம், பொருளாளா் சித்திக், செயலா் பா்னபாஸ், இளைஞா் பாசறை செயலா் சுதாகா் கந்தசாமி, தொழிற்சங்கப் பொறுப்பாளா் சந்திரசேகா், மள்ளா் மீட்புக் கழகம் செந்தில் மள்ளா், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவா் கோட்டூா் எம்.கே. பீா் மஸ்தான், நகரத் தலைவா் பீா்ஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.