கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லை சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம் தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.

Updated On :14 நவம்பர் 2024, 11:09 pm

Din

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டான அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானாவை விரிவாக்கம் செய்தல், உடையாா்பட்டி சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்தல் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பாளையங்கோட்டை மண்டலம், சரண்யா நகா் பகுதியில் பாதாளச் சாக்கடை கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்து சமரசப்படுத்தினா். இந்நிலையில் உந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் பொதுமக்களிடம் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

ஆய்வின்போது செயற்பொறியாளா் கண்ணன், உதவி ஆணையா்கள் சுகி பிரேமலா, ஜான்சன் தேவசகாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.