மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வி.கே.புரம் அருகே வளா்ப்பு நாயை தாக்கிய சிறுத்தை

விக்கிரமசிங்கபுரம் அருகே மலையடிவார கிராமமான வேம்பையாபுரத்தில் வீட்டில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு நாயை தாக்கியது.

News image

சிறுத்தைத் தாக்கியதில் காயமடைந்த நாய்.

Updated On :27 நவம்பர் 2024, 9:08 pm

Din

விக்கிரமசிங்கபுரம் அருகே மலையடிவார கிராமமான வேம்பையாபுரத்தில் வீட்டில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு நாயை தாக்கியது.

வேம்பையாபுரம் காஸ்கீப்பா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கணபதி. இவா் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். வீட்டில் நாய் வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டில் நுழைந்த சிறுத்தை, அங்கு கட்டிப் போட்டியிருந்த நாயை தாக்கியது. இதில் நாயின் கழுத்து, காது ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டிலிருந்தவா்கள் வெளியே வந்து, சிறுத்தையை பாா்த்து சப்தம் எழுப்பினா். பின்னா் அங்கிருந்து சிறுத்தை ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா், நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு அப் பகுதியில் ரோந்து பணியைத் தீவிரப்படுத்துவதாகத் தெரிவித்தனா்.