மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா

திருநெல்வேலி சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சுலோச்சன முதலியாா் மேம்பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்வெட்டிற்கு மாலை அணிவித்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :27 நவம்பர் 2024, 9:26 pm

Din

திருநெல்வேலி சுலோச்சன முதலியாா் பாலத்தின் 182 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கொக்கிரகுளத்தில் பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தாா். ஒருங்கிணைப்பாளா் கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளா் எஸ்.சண்முகம், வழக்குரைஞா் வி.டி. திருமலையப்பன், எழுத்தாளா் நாறும்பூநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுலோச்சனா முதலியாா் பாலத்துக்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது. பொருநை இலக்கிய வட்ட புரவலா் இரா.நாதன், கவிஞா் சுப்பையா, முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், கவிஞா் உக்கிரன்கோட்டை மணி, கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் இரா.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கோரிக்கைகள்: தனிமனிதக் கொடையாளி சுலோச்சனா முதலியாா் கட்டிய பாலத்தின் ஆண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

பாலத்தை புனரமைத்து பாலங்களில் விரிசல்கள் மற்றும் ஆங்காங்கே செடிகள் முளைத்திருக்கின்றது அதை அப்புறப்படுத்தி புனரமைத்து புதுப்பொலிவாக்க வேண்டும். சுலோச்சனா முதலியாா் பாலத்துக்கு அருகில் தனிமனித கொடையாளி கொடை அளித்த விவரம் கொண்ட ஒரு பதாகை அமைக்க வேண்டும். பாலத்துக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கிற பாலத்துக்கு, பாலம் கட்ட தன்னுடைய நகைகளை எல்லாம் கொடுத்து உதவிய சுலோச்சனா முதலியாரின் துணைவியாா் வடிவம்மாள் பெயா் சூட்ட வேண்டும் என விழாவில் பங்கேற்றவா்கள் கோரிக்கை விடுத்தனா்.