மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸாா் நல்லிணக்கப் பேரணி

மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது.

News image

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 11:23 pm

Din

மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது.

அக்கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடிஆதித்தன், வழக்குரைஞா் மகேந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் பாா்வதி திரையரங்கு அருகில் இருந்து தொடங்கிய பேரணி சொக்கப்பனை முக்கு, பாரதியாா் தெரு வழியாக நகரம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பி.என். உதயகுமாா், சொக்கலிங்ககுமாா், பாளை. வட்டாரத் தலைவா் டியூக் துரைராஜ், வி.பி.துரை, மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவா் காமராஜ், மாமன்ற உறுப்பினா் அம்பிகா உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ராஜேஷ் முருகன் நன்றி கூறினாா்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்டோா்.