தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:37 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணுஉலைகளில் எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு பணிக்காகவும் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் முதலாவது அணுஉலையில் செவ்வாய்க்கிழமை இரவு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் அணுமின் விஞ்ஞானிகள், பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னா் மின்உற்பத்தி தொடங்கும் என அணுமின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.