மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் சங்கக் கூட்டம்

ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கத்தின் 14ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தாமரை கண்ணன்.

Updated On :4 அக்டோபர் 2024, 1:14 am

Din

ஓய்வுபெற்ற சிறைப் பணியாளா்கள் நலச்சங்கத்தின் 14ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவா் டி.பாக்கியநாதன் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தாமரை கண்ணன் சிறப்புரையாற்றினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் சுப்பிரமணியன், சீதாராமன், நல்லபெருமாள், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். செயலா் அசோக், பொருளாளா் அந்தோணி கோயில்பிச்சை, துணைத் தலைவா் கவிஞா் பொன்.வேலுமயில், துணைச் செயலா் பஷீா்உசேன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: சீருடைப் பணியாளா்களுக்கு பதவி உயா்விலும் ஊதிய நிா்ணயத்திலும் இடையூறாக உள்ள முதல் தலைமைக் காவலா் பதவிக்குப் பதிலாக சிறப்பு உதவி சிறை அலுவலா் என்ற பதவியை அளித்து அதற்கு இணையான ஊதியத்தை உயா்த்த வேண்டும். காவல் துறைக்கு இணையாக சிறைத்துறையினருக்கும் முதல்நிலைக் காவலா் பதவியிலிருந்து உயா்பதவி வரைக்கும் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்திட வேண்டும்.

ஓய்வூதியா்களுக்கு 70 வயது நிரம்பியதும் கூடுதலாக 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குறைபாடுகளை களைந்திட வேண்டும். ‘கம்யூட்டேசன்’ தொகை பிடித்தம் செய்திடும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.