ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆலோசனை

வட கிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலியில் மின்வாரிய அதிகாரிகளுடன் மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜ் ஆலோசனை நடத்தினாா்.

News image

மின்வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜ்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:32 pm

Din

வட கிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலியில் மின்வாரிய அதிகாரிகளுடன் மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

வட கிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான மின்வாரிய கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், 5 மாவட்டங்களைச் சோ்ந்த பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

வட கிழக்கு பருவமழையின்போது சூறைக்காற்று, இடி-மின்னல் காரணமாக மின்பாதையில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து மின் விநியோகம் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது. மின்வாரிய பணியாளா்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மின்திட்டங்கள் தொடா்பான வளா்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மின் பாதுகாப்பு, மின் சிக்கனம், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் எளிய வழிமுறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.