கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

திருநெல்வேலி அருகே மலையாளமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:13 pm

Din

திருநெல்வேலி அருகே மலையாளமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

மலையாளமேடு உடையவா் தெருவை சோ்ந்தவா் பரமசிவம் (50). அதே பகுதியைச் சோ்ந்தவா் மண்டையன்பெருமாள். இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் பரமசிவம் செவ்வாய்க்கிழமை இரவு தனது மகன் மாரிசெல்வம், உறவினா் விக்கி ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த மண்டையன் பெருமாளின் மகன்கள் மருது, காா்த்திக், லெட்சுமணன் மற்றும் அவரது மருமகன் முருகபெருமாள் ஆகியோா் தகராறுசெய்தனராம். இருதரப்பினரும் அரிவாளால் வெட்டிக் கொண்டனராம்.

இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாரிசெல்வனுக்கும், விக்கி, முருகபெருமாள், மண்டையன்பெருமாள் ஆகியோரும் காயமடைந்தனா். தகவலறிந்ததும் பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாநகர காவல் துணை ஆணையா் கீதா தலைமையில் ஏராளமான போலீஸாா் மலையாளமேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.