திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நெல்லையில் சுதேசி ஸ்டீம் ஆங்கில நூல் அறிமுக விழா

News image
Updated On :7 செப்டம்பர் 2024, 5:28 am IST

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில், பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘சுதேசி ஸ்டீம்’ ஆங்கில நூல் அறிமுக விழா, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சி. யின் 153 ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவிற்கு, திருநெல்வேலி கல்விச்சங்க தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் வரவேற்றாா். விழாவில், ஆட்சியா் காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

நூலை அறிமுகம் செய்து பேராசியா் வி.பொன்ராஜ் பேசியது: வங்கப் பிரிவினையின் விளைவாக சுதேசி இயக்கம் வீறுகொண்டு கிளம்பியது தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தான். அதை செயல்படுத்தியவா் வ.உ.சி. அவரும் சுப்ரமணிய சிவாவும் நடத்திய கூட்டங்கள் எண்ணிலடங்கா. சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கப்பட்டபோது மதுரை பாண்டிதுரை தேவா் உள்ளிட்ட பலா் பங்குகளை வாங்கினா். ஆங்கிலேயா்கள் அதை முடக்கச் செய்த சதிகளை எல்லாம் இந்த நூல் விவரிக்கிறது. வ.உ.சி.யின் பெருமைகளை தமிழா்களாகிய நாம் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது. வட இந்திய மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி எளிய ஆங்கிலத்தில் இதை எழுதியிருக்கிறாா் என்றாா்.

கல்விச் சங்க செயலா் மு.செல்லையா, பேராசிரியா் மாணிக்கம், அருணா காா்டியாக் கோ் நிா்வாக இயக்குநா் சொா்ணலதா அருணாசலம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

எழுத்தாளா் சங்க மாவட்ட செயலா் ச.வண்ணமுத்து நன்றி கூறினாா்.

விழாவில், கவிஞா் பாப்பாக்குடி செல்வமணி, செ.ச.பிரபு, ஜெயபாலன், முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், அ.ஜெகதீசன், தலைமை ஆசிரியா் உலகநாதன், ஆசிரியா் சொக்கலிங்கம், இளம்பிறை, கவிஞா் பாமணி, சிந்துபூந்துறை சண்முகம், கவிஞா் கிருஷி, ராஜகோபால், சேதுபாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்06க்ஷா்ா் ‘சுதேசி ஸ்டீம்’ ஆங்கில நூலை அறிமுகப்படுத்திய ஆட்சியா் காா்த்திகேயன்.