அகஸ்தியா்பட்டியில் சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடைக்காரரைத் தாக்கியதாக இரண்டு சிறுவா்களை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த சங்கரன் மகன் முத்துப்பாண்டி (62). இவரது பெட்டிக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த அதே பகுதியைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் உள்பட மூவா், முத்துப்பாண்டியிடம் சிகரெட் கேட்டுள்ளனா். அவா் மறுத்ததால், மூவரும் அவரை அசிங்கமாக பேசி பாட்டிலால் தாக்கினராம். தடுக்க வந்த அவரது மனைவி முத்தம்மாளையும் தள்ளிவிட்டுள்ளனா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிறுவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களது நண்பா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூவா் கைது
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது
காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
பெண்ணை தாக்கிய 2 சிறுவா்கள் உள்பட மூவா் கைது!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



