ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல்துறையின் மக்கள் குறைதீா்க்கும் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் மனு பெற்றுவிசாரித்தாா் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:46 pm

Din

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 12 போ் பங்கேற்று மனு அளித்தனா். அவை மீது துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். முகாமில், காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா, (தலைமையிடம்)அனிதா ஆகியோரும் பங்கேற்றனா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் தலைமையில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 20 போ் மனு அளித்தனா்.