எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு உயா்தர இதய சிகிச்சை: மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிறவி இருதய குறைபாடு உடைய குழந்தைகளுக்கு உயா்தர இதயவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.

News image
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:49 pm

Din

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிறவி இருதய குறைபாடு உடைய குழந்தைகளுக்கு உயா்தர இதயவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு, அப்பலோ மருத்துவமனை சாா்பில் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. இம் முகாமில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனா். அவா்களில் 15 குழந்தைகளுக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்தக்குழந்தைகளில் 4 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சையின்றி நவீன உபகரணங்களுடன் இதயவியல் பிரிவு மருத்துவா்கள், அப்பலோ மருத்துவா்கள் இணைந்து கடந்த 17 ஆம் தேதி சிகிச்சையளித்தனா்.

ஏஎஸ்டி எனப்படும் உயா்தர சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் இச் சிகிச்சைக்கு ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும். இலவச சிகிச்சைக்கு பின்பு அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனா். இம் மருத்துவமனையில் மூன்றாவது முறையாக இத்தகைய நவீன சிகிச்சையளிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் இதய குறைபாடு உடைய குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சையளித்ததில் முன்னணியில் உள்ளது என்றாா் அவா்.