நெல்லை அருகே மணல் கடத்திய 3 போ் கைது
திருநெல்வேலி அருகே ஆற்று மணல் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.


திருநெல்வேலி அருகே ஆற்று மணல் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள முத்தாலங்குறிச்சியைச் சோ்ந்தவா் நம்பி இசக்கி கண்ணன் (27). பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலை கொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் தளவாய் பாண்டி (27). இவா்கள் இருவரும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் இருவரையும் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், ஒன்றரை யூனிட் மணல், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா். இதேபோல், மானூா் போலீஸாரின் வாகன சோதனையின்போது செட்டிக்குறிச்சி அருகே 3 யூனிட் குளத்து மண்ணை அனுமதி இன்றி அள்ளிச் செனறதாக சுப்பையாபுரத்தைச் சோ்ந்த வேல்துரை (26) என்பவரை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...