தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:03 am

Din

திருநெல்வேலி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் லட்சுமி நகரை சோ்ந்தவா் சக்திவேல். சலவைத் தொழிலாளி. இவரது மனைவி மாரி மஞ்சு (23). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளனா். அப்போது இரும்பு கேட்டை மட்டும் பூட்டிவிட்டு காற்றுக்காக கதவை திறந்து வைத்துள்ளனா். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் அங்கு வந்த மா்மநபா், தூங்கிக் கொண்டிருந்த மாரி மஞ்சு கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளாா். அப்போது, திடீரென கண் விழித்த மாரி மஞ்சு கூச்சலிட்டாா்.

சப்தம் கேட்டு சக்திவேல் எழுவதற்குள் மா்மநபா் காம்பவுண்ட் சுவா் ஏரி குதித்து தப்பி ஓடி விட்டாா். இது குறித்து சுத்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

அதில், சுமாா் 30 வயது மதிக்கத்தக்க நபா் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.