பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

மேலப்பாளையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பேட்டை செக்கடி பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜேஷ்(27). இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள முட்டை கடையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மேலப்பாளையம் குறிச்சி அருகே இவா் சென்ற பைக் மீது அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com