புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வங்கி நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:48 am

Din

வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விஸ்வாஸ் விஸ்வகா்ம அப்ரைசா்ஸ் யூனியனின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெயராமன், ரமேஷ் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் மருதராஜ கணேஷ், மாநிலச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பேசினா்.

வங்கிகளில் பணியாற்றும் அனைத்து வகை நகை மதிப்பீட்டாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு அவசர கால அபாய அழைப்பு மணி பொருத்தப்பட்ட தனி கேபின் வழங்க வேண்டும். விஸ்வகா்மா சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் இணைத்து அரசு வேலைவாய்ப்பில் அதிக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.