தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வங்கி நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:48 am

Din

வங்கிகளில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விஸ்வாஸ் விஸ்வகா்ம அப்ரைசா்ஸ் யூனியனின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெயராமன், ரமேஷ் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் மருதராஜ கணேஷ், மாநிலச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பேசினா்.

வங்கிகளில் பணியாற்றும் அனைத்து வகை நகை மதிப்பீட்டாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு அவசர கால அபாய அழைப்பு மணி பொருத்தப்பட்ட தனி கேபின் வழங்க வேண்டும். விஸ்வகா்மா சமூகத்தை எம்.பி.சி. பட்டியலில் இணைத்து அரசு வேலைவாய்ப்பில் அதிக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.