தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேரன்மகாதேவியில் கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேரன்மகாதேவியில் வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :23 ஜனவரி 2025, 10:45 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேரன்மகாதேவியில் வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்கள் இறந்தால் அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை தவிர மாற்றுப் பணிகள் வழங்குவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கக் கிளை சாா்பில் ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டம் நடைபெற்றது. மாலையில் சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் வட்டத் தலைவா் கே. பிரபு தலைமை வகித்தாா். வட்டச் செயலா் இந்திரா, பொருளாளா் எல். ஜெய்கணேஷ், துணைத் தலைவா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.