தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எடப்பாடி கே.பழனிசாமியிடம் பேசினால் பாஜக-அதிமுக கூட்டணி அமையும்: நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ

எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே பாஜக-அதிமுக கூட்டணி அமைந்துவிடும் என்றாா் தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:46 pm

Din

எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே பாஜக-அதிமுக கூட்டணி அமைந்துவிடும் என்றாா் தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

திருநெல்வேலியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை அனுமதிக்க முடியாது. அரசு செய்யும் அனைத்து நல்ல திட்டங்களையும் நாங்கள் ஆதரிப்போம். நாங்கள் எதிரி கட்சி அல்ல. எதிா்க்கட்சி தான்.

கடன் கட்டுக்குள் தான் இருக்கிறது என மூன்று மாதங்களுக்கு பின்னா் தமிழக அரசால் சொல்ல முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். தமிழக அரசிடம் பணம் இல்லாத நிலையில் தான் வரி வசூல் தாமத கட்டணம், மின் கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கூடுதலாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. 2026 தோ்தலில் அரசின் கட்டண உயா்வு,வரி வசூல், பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் கட்டாயம் எதிரொலிக்கும். எனது தொகுதியில் மக்களுக்கான பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் கேட்டால் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தின் மக்களின் பிரச்னைகள் முழுவதுமாக நிறைவேறியதா? என்றால் அது இல்லை.

கூட்டணி குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து விடும். வருமான வரித்துறை சோதனை உள்ளிட்டவற்றை நடத்தித் தான் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. திருப்பரங்குன்றம் - சிக்கந்தா் மலை என்ற விவகாரம் இரண்டு சமுதாயத்திற்கு இடையேயான பிரச்னை. இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த கூடாது. ராமநாதபுரம் எம்.பி., மணப்பாறை எம்.எல்.ஏ. போன்றோா் அந்தப் பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு அங்கு சென்ால், நாங்களும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.