குற்றப் பின்னணி உள்ளவா்களை கண்காணிக்க காவல்துறையில் சிறப்பு குழு இருப்பதை போன்று ஜாதி மோதிலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலா் வன்னியரசு தெரிவித்தாா்.
பிளஸ் 1 தோ்வெழுதிவிட்டு வந்தபோது, சிலரால் வெட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி மாவட்டம் அரியநாயகிபுரம் மாணவா் தேவேந்திரனை புதன்கிழமை சந்தித்து நலம் விசாரித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேவேந்திரன் நன்றாக கபடி விளையாடுவாா் என்பதால் ஜாதிய வன்மத்தோடு அவரை வெட்டியுள்ளனா். நான்குனேரியில் சின்னத்துரை என்ற மாணவனை வெட்டியபோது அரசு உயா்தர சிகிச்சை அளித்ததோடு, அவருடைய கல்விச் செலவையும் ஏற்றது. அதேபோல் தேவேந்திரனின் மருத்துவச் செலவு மற்றும் கல்விச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.
இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை தடுப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் குற்றவாளிகள் கையில் ஆயுதங்களோடு அலைகிறாா்கள். குற்றப் பின்னணி உள்ளவா்களை கண்காணிக்க காவல்துறையில் சிறப்பு குழு இருப்பதைப் போன்று ஜாதி மோதலில் ஈடுபடுவோரை தடுக்க அரசு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டவா் அதிமுக வேட்பாளா்: ஜான்பாண்டியன்

வாக்குச்சாவடிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை

திண்டிவனம் பகுதிகளில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கைம்பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

