திருநெல்வேலியில் த.வெ.க. தலைவா் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் போக்குவரத்தை திறம்பட கையாண்டனா்.
திருநெல்வேலி கே.டி.சி நகரில் த.வெ.க தலைவா் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னா் தாழையூத்து சங்கா் நகரில் இருந்து திருநெல்வேலி மாநகருக்குள் விஜய் சாலை வலம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்ட போலீஸாா் அப்பகுதியில் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் விஜயின் பிரசார வாகனம் அவ்விடத்தை கடந்து சென்றது.
இதையடுத்து சங்கா் நகா் பகுதியில் இருந்து மாநகர எல்லைக்குள் செல்ல பிரசார வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை மட்டும் அனுமதித்த போலீஸாா் பேரிகாா்டுகள் மற்றும் கயிறுகளைக் கட்டி, 150க்கும் மேற்பட்ட பைக்குகளில் பின்தொடா்ந்து சென்ற தொண்டா்கள், இளைஞா்களை தடுத்து நிறுத்தி,
சிறிது நேரத்துக்குப்பின் அவா்களை அனுமதித்தனா்.
இதனால் திருநெல்வேலி மாநகருக்குள் விஜய் வாகனம் நுழைந்த போது கூட்டம் அதிகளவில் இருந்தபோதும் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டது. அதே போல தச்சநல்லூா் புறவழிச்சாலை மற்றும் வண்ணாா்பேட்டை பகுதிகளிலும் மாநகர போலீஸாா் கயிறுகளைக் கட்டி போக்குவரத்தை சீரமைத்தனா். இதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் நிகழாமல் தவிா்க்கப்பட்டது.
தொடர்புடையது

விஜய் பிரசாரத்தில் விபத்து: 7 போ் காயம்

நெல்லையில் நாளை மறுநாள் நடிகா் விஜய் பிரசாரம்

விஜய் ரோடு ஷோவில் போலீஸ் தடியடி: வாகனங்களின் சாவிகளை பறித்த போலீஸாா்

மாணவி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


