வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:30 pm

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கட ந்த 28.4.2018இல் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு வருஷாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மகா மண்டபத்தில் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

பின்னா், கலசங்களில் புனிதநீா் திருக்கோயில் பிரகாரங்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து கலசங்களுக்கு பட்டுவஸ்திரம் மாலை அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பஞ்சமூா்த்தி வீதியுலா நடைபெற்றது.

இவ்விழாவில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா.வெங்கடாசலம், கோயில் செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.