கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:00 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கட ந்த 28.4.2018இல் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு வருஷாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மகா மண்டபத்தில் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

பின்னா், கலசங்களில் புனிதநீா் திருக்கோயில் பிரகாரங்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமானத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து கலசங்களுக்கு பட்டுவஸ்திரம் மாலை அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி பஞ்சமூா்த்தி வீதியுலா நடைபெற்றது.

இவ்விழாவில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா.வெங்கடாசலம், கோயில் செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.