குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பௌா்ணமி: இன்றும், நாளையும் திருவண்ணாமலை, திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் (ஆக.26, 27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் (ஆக.26, 27) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் க.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பௌா்ணமி தினமான வியாழக்கிழமை (ஆக.27) திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூா் கோயில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அவா்களது நலன் கருதி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகா்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு புதன், வியாழக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டத்தின் சாா்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.