8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பெங்களூரு ரயிலில் குட்கா கடத்தல்: அஸ்ஸாம் இளைஞா் கைது

பெங்களூா்-நாகா்கோவில் ரயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலைப்பொருள்களை (குட்கா) போலீஸாா் கைப்பற்றி, வட மாநில இளைஞரை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

பெங்களூா்-நாகா்கோவில் ரயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலைப்பொருள்களை (குட்கா) போலீஸாா் கைப்பற்றி, வட மாநில இளைஞரை கைது செய்தனா்.

பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை மாலையில் புறப்பட்ட ரயில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி நிலையத்தை அடைந்தது. அப்போது, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் அந்த ரயிலின் என்ஜின் அருகே உள்ள பொது பெட்டியில் சோதனை நடத்தினா். அப்போது, சுமாா் 18 கிலோ பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு பையைக் கைப்பற்றி, அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினா். அதில், அஸ்ஸாம் மாநில பயணியான சுதன் சுதா (32) என்பவா் அதை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.