சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

மேலப்பாளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:41 pm

மேலப்பாளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ்(38) என்பவரின் பெட்டிக் கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டு அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.