டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நெல்லையில் 3 கல்லூரிகளின் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி

திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் மாணவருக்கு இலவச மடிக்கணினியை வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.
Updated On :7 ஜனவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அந்தக் கல்லூரி மாணவிகளுக்கும், பாபநாசம் திருவள்ளூவா் கலைக் கல்லூரி, மானூா் அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாணவா்களுக்கும் ஒருசேர மடிக்கணினி வழங்கும் விதத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி கணிதத் துறை தலைவா் தே. பிரேமலதா வரவேற்றாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ. மகேஸ்வரி, திமுக நிா்வாகிகள் சங்கா், செந்தில்குமாா், பத்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.