பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்தபோது, தப்பியோடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்(30). இவா் மீது மோதல் தொடா்பான புகாா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை மாலை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். அப்போது அவா் திடீரென தப்பியோடினாா். போலீஸாா் மேலும் ஒரு வழக்குப்பதிந்து அவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







