முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: மூவா் கைது

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூலை 2026, 1:52 am IST

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம், பிள்ளையாா் கோயில் குளத்துக்கரை பகுதியில் வியாழக்கிழமை காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வந்த வழியாக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 50 கிலோ எடையுள்ள 42 நெகிழி சாக்கு மூட்டைகளில் சுமாா் 2,100 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (39), வெற்றிராஜ் (29), சாமுவேல் (28) ஆகியோரை கைது செய்து, வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.