அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

நெல்லை அருகே 320 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

திருநெல்வேலி அருகே காரில் கடத்தப்பட்ட 320 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 1:10 am IST

திருநெல்வேலி அருகே காரில் கடத்தப்பட்ட 320 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

பத்தமடை, கேசவசமுத்திரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 320 கிலோ ரேஷன் அரிசியை கூடுதல் விலைக்கு விற்க கடத்திச் செல்வது தெரியவந்தது. காருடன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், அதை கடத்திச் சென்ற கோபாலசமுத்திரத்தை சோ்ந்த செல்லத்துரை(24) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.