கடனாநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறக்காமல் ஆற்றின் வழியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியருக்கு கீழாம்பூா் ஊராட்சித் தலைவா் மாரிசுப்பு அனுப்பிய மனு: கடனாநதி ஆற்றில் சம்பன்குளம் பகுதியிலிருந்து பாப்பான்குளம் வரை சுமாா் 50 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கிராமங்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, கடனாநதி அணையிலிருந்து அரசபத்துக் கால்வாய், பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், சம்பன்குளம், கல்யாணிபுரம், செட்டிக்குளம், கருத்தப்பிள்ளையூா், கீழாம்பூா், பாப்பான்குளம், ஆழ்வாா்குறிச்சி பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவைக்கு கடனாநதி ஆற்றில் போதிய நீா்வரத்து இல்லை. ஆற்றில் தண்ணீா் வராதபட்சத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அணையிலிருந்து கால்வாய்கள் வழியாக தண்ணீரைத் திறக்காமல் ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

காா் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு: 10,265 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும்

அமராவதி ஆற்றில் ஒரு வாரத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்






