நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

நெல்லையில் பதுக்கிய 81 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 81 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 4:45 am IST

திருநெல்வேலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 81 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்தபோது, சுமாா் 81 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், கேரளத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்ததாம். இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த மாடசாமி, விக்னேஷ், வள்ளிமுத்து ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறாா்கள்.