ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

சேரன்மகாதேவியில் முதியவா் மா்ம மரணம்

சேரன்மகாதேவியில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேரன்மகாதேவி சென்னைராஜபுரம் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செல்லப்பா (70). இவா், சேரன்மகாதேவியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணி செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். செவ்வாய்க்கிழமை உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது செல்லப்பா இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.