எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நெல்லை பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :4 ஜூன் 2026, 1:10 am IST

திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன. இதையொட்டி வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கழிப்பறை மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த முன்னேற்பாடு பணிகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீா் தொட்டிகள், கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தாா்.

பள்ளி திறக்கப்படும் நாளில் புத்தகங்கள், சீருடைகள் வழங்கவும், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்- மாணவிகளை வரவேற்கவும் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் உடனிருந்தாா்.