சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:51 am IST

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஜெபா காா்டன் பகுதியில் போலீஸாரைக் கண்டதும் பைக்கை திருப்பிச் செல்ல முயன்றவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா் மூலைக்கரைப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா்(58) என்பதும், சுமாா் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வாகனத்துக்குள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சா, ரூ.240 பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.