15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:51 am IST

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஜெபா காா்டன் பகுதியில் போலீஸாரைக் கண்டதும் பைக்கை திருப்பிச் செல்ல முயன்றவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா் மூலைக்கரைப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா்(58) என்பதும், சுமாா் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வாகனத்துக்குள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சா, ரூ.240 பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.