மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

மேலச்செவலில் விஷ பூச்சி கடித்து பெண் பலி

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் விஷ பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் விஷ பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மேலச்செவல் கோலியா் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய மாதா (48). இவா் வீட்டில் இருந்தபோது, செவ்வாய்க்கிழமை விஷ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.