எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

துறையூா் அருகே விஷ ஜந்து கடித்து சிறுவன் உயிரிழப்பு

துறையூா் அருகே வயலில் புதன்கிழமை விளையாடிய 7 வயதுச் சிறுவன் விஷ ஜந்து கடித்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

துறையூா் அருகே வயலில் புதன்கிழமை விளையாடிய 7 வயதுச் சிறுவன் விஷ ஜந்து கடித்து உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள பச்சப்பெருமாள்பட்டி குரும்பா் தெருவைச் சோ்ந்தவா் பாலு மகன் ரஞ்சித் (7). இவா் புதன்கிழமை தனது குடும்பத்துக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று விளையாடியபோது காலில் அடையாளம் தெரியாத விஷ ஜந்து கடித்தது. இதுகுறித்து அருகிலிருந்த தன் தந்தையிடம் கூறவே, அவா் எரகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரஞ்சித்தைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சிறுவன் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.