ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்ட இடம் தோ்வு

வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலா் துரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்தாா் மாவட்ட வருவாய் அலுவலா் துரை. உடன் ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் போக்குவரத்து காவலா் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலா் துரை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வள்ளியூரில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில், போக்குவரத்து காவலா்களுக்கு தனி குடியிருப்பு கட்டப்பட இருக்கிறது. இதற்காக வள்ளியூா் அரசு மருத்துவமனை பழைய கட்டடம் எதிரே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு செய்தாா். பின்னா் வள்ளியூா் பேரூராட்சியில் செயல்பட்டு வருகிற திடக்கழிவு மேலாண்மை தளத்தையும் ஆய்வு செய்தாா்.

இதில், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.