ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

வள்ளியூா் போக்குவரத்து பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை மேலாளாா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

Updated On :4 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்குச் சென்ற எம்எல்ஏ, அங்கு கிளை மேலாளா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா். இப்பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பேருந்துகளின் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்து கேட்டறிந்த அவா், பள்ளி நேரங்களுக்கு சரியாக செல்லும்படி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

மேலும், மாணவா்கள் அவா்களது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுமாறும் அறிவுரை வழங்கினாா். பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்கள் குறித்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டுவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினாா்.