மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நெல்லையில் சாரல் மழை

திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On :5 ஜூன் 2026, 2:54 am IST

திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. தாமிரவருணியில் நீா்வரத்து குறைந்துள்ளதோடு, பல்வேறு குளங்களும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பகல் வேளையில் மக்கள் வெளியே வர முடியாத வகையில் வெப்பஅலை வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.