/
திருநெல்வேலியில் வியாழக்கிழமை இரவு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. தாமிரவருணியில் நீா்வரத்து குறைந்துள்ளதோடு, பல்வேறு குளங்களும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பகல் வேளையில் மக்கள் வெளியே வர முடியாத வகையில் வெப்பஅலை வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் பதுக்கிய 81 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


